2020ம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 140க்கும் அதிகமான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மற்றும் 54 சிறுவர் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக நாடாளுமன்றில் தகவல் வெளியிட்டுள்ளார் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.
பல சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் குறித்த காலப்பகுதியில் 42 மோசமான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஹேஷ விதானகே கேள்வியெழுப்பிய நிலையில் இவ்வாறு பதிலளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment