அமைச்சர்கள் பதவி விலகுவது தவறு: மனோ விசனம் - sonakar.com

Post Top Ad

Wednesday 20 November 2019

அமைச்சர்கள் பதவி விலகுவது தவறு: மனோ விசனம்


மக்கள் ஆணையை மதிக்காது, நாடாளுமன்ற பதவிக் காலத்தை பூர்த்தி செய்ய முன் அதனைக் கலைக்க வழிசமைத்து அமைச்சர் பதவி விலகுவது தவறான உதாரணம் என தெரிவிக்கிறார் அமைச்சர் மனோ கணேசன்.



நாடாளுமன்றைக் கலைப்பதற்குத் தாம் ஆதரவளிக்கப் போவதில்லையென தெரிவிக்கும் அவர், நாடாளுமன்றின் பதவிக் காலம் முடியும் வரை தொடர வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என தெரிவிக்கிறார்.

சஜித்  பிரேமதாச தேர்தலில் தோல்வியுற்ற பின், அவரை ஆதரித்த முக்கிய அமைச்சர்கள் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment