நாளை கொழும்பு அதிரும்: JO எச்சரிக்கை! - sonakar.com

Post Top Ad

Tuesday 4 September 2018

நாளை கொழும்பு அதிரும்: JO எச்சரிக்கை!


கொழும்பை நோக்கிய மக்கள் சக்தி எனும் தொனிப் பொருளில் நாளை தாம் நடாத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தினால் நாளை கொழும்பு முற்றாக முடங்கப் போவதாக எச்சரிக்கிறது கூட்டு எதிர்க்கட்சி.


இறுதிக் கட்ட பணிகளை மேற்கொண்டு வரும் நாமல் ராஜபக்ச தற்போது பௌத்த தலைவர்களை சந்தித்து ஆசி பெற்று வரும் நிலையில் நாளைய தினம் கொழும்பு நகரம் முற்றாக முடங்கும் வகையில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாகவும் மக்கள் திரளவுள்ளதாகவும் கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கிறது.

இதேவேளை, நகரைப் பாதுகாக்கத் தாம் தயார் நிலையில் இருப்பதாக பொலிசாரும் இவ்வார்ப்பாட்டத்தைக் கணக்கிலெடுக்கப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியினரும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment