நீதிமன்ற அவமதிப்பு: ஞானசாரவின் வழக்கு ஒரு வாரம் தள்ளி வைப்பு - sonakar.com

Post Top Ad

Wednesday 11 July 2018

நீதிமன்ற அவமதிப்பு: ஞானசாரவின் வழக்கு ஒரு வாரம் தள்ளி வைப்பு


ஞானசாரவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எதிர்வரும் 18ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


ஹோமாகம நீதிமன்றுக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்த பயங்கரவாதி ஞானசார அங்கு சாட்சியாகப் பிரசன்னமாகியிருந்த திருமதி சந்தியா எக்னலிகொடவையும் அச்சுறுத்தியிருந்தார். இதன் பின்னணியில் ஆறு மாத கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்த போதிலும் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் தொடர்பிலான விசாரணை இடம்பெறுகிறது.

கடந்த வருடம் இனவாத பதற்றத்தை உருவாக்கி ஒளிந்திருந்த ஞானசாரவை நான்கு விசேட பொலிஸ் படையணிகள் தேடியும் கைது செய்ய முடியாது போயிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment