நம்பிக்கையில்லா பிரேரணை: மைத்ரியை வீழ்த்துவதே நோக்கம்: மங்கள - sonakar.com

Post Top Ad

Tuesday, 27 March 2018

நம்பிக்கையில்லா பிரேரணை: மைத்ரியை வீழ்த்துவதே நோக்கம்: மங்கள


ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை மஹிந்த அணியினர் கொண்டு வந்ததன் நோக்கம், மைத்ரிபால சிறிசேனை வீழ்த்துவேதே என தெரிவிக்கிறார் நிதியமைச்சர் மங்கள சமரவீர.

இவ்வாறான ஒரு அரசியல் சூழ்நிலையை உருவாக்கி மைத்ரி - ரணிலிடையே பிளவை உருவாக்குவதே இங்கு அடிப்படை நோக்கம் எனவும் இதன் மூலம் மைத்ரியைத் தனிமைப்படுத்தி அவரை வீழ்த்துவதே இலக்கு எனவும் மங்கள மேலும் தெரிவித்துள்ளார்.



இதேவேளை, மஹிந்த வெறும் பலி மாடு எனவும் மைத்ரியே நம்பிக்கையில்லா பிரேரணையின் சூத்திரதாரியெனவும் ஜே.வி.பியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment