முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தில் ஒலிப்பதிவொன்றை வெளியிட்டிருந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சிங்கள மொழியிலான குறித்த ஒலிப்பதிவு தொடர்ந்தும் வட்சப் ஊடாடக பகிரப்பட்டு வருவதுடன் அதில் வெளியிடப்பட்டிருக்கும் முஸ்லிம் விரோத கருத்துக்கள் தொடர்பில் பதற்றம் நிலவுகிறது.
தமக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல் எனக் கூறி குறித்த நபர் முஸ்லிம் விரோத கருத்துக்களை பதிந்துள்ளமையும் முஸ்லிம்களே கொரோனா வைரசை வேண்டுமென்று நாடெல்லாம் பரப்பி வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment