தனிமைப்படுத்தல் முகாம்களிலிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ள நிலையில் அவர்களைத் தொடர்ந்தும் தமது வீடுகளில் மேலும் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முகாமிலிருந்து வீடு திரும்பிய இருவர் நேற்றும் இன்றும் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளதன் பின்னணியில் இப்புதிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் அக்குரஸ்ஸயில் ஒருவர் கண்டறியப்பட்டதன் பின்னணியில் இராணுவ தளபதி இவ்வேண்டுகோளை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment