பள்ளிகளில் 'கஞ்சி' காய்ச்சவோ பகிர்ந்தளிக்கவோ வேண்டாம்: வக்ப் சபை! - sonakar.com

Post Top Ad

Monday 20 April 2020

பள்ளிகளில் 'கஞ்சி' காய்ச்சவோ பகிர்ந்தளிக்கவோ வேண்டாம்: வக்ப் சபை!



இம்முறை ரமழான் காலத்தின் போது பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சல் மற்றும் பகிர்ந்தளித்தல் நடவடிக்கைகளை செய்ய வேண்டாம் என மஸ்ஜித் நிர்வாகங்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது வக்ப் சபை. 


கொரோனா சூழ்நிலையில், மார்ச் மாதம் 15ம் திகதி சுகாதார அமைச்சு வழங்கிய பணிப்புரைகள் 'மறு அறிவித்தல்' வரை தொடரும் என சுட்டிக்காட்டப்பட்டு இதற்கான அறிவுறுத்தலை வக்ப் சபை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவித்தலைக் கீழ்க் காணலாம்:


சகல மஸ்ஜித் நிருவாகிகளுக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

விடயம் : இலங்கை வக்ப் சபையின் றமழான் 2020 க்கான பணிப்புரைகள்

15.03.2020 திகதியன்று இலங்கை வக்ப் சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் றமழான் மாதம் முழுவதற்கும் அல்லது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும்.

அதற்கேற்ப,

1. இமாம் / முஅத்தின்மார் அல்லாத எந்தப் பொதுமக்களுக்காகவும் பள்ளிவாயல்களைத் திறக்க வேண்டாம் என்றும்,

2. ஜும்ஆ தொழுகை, ஐவேளை தொழுகை, தராவீஹ் தொழுகை உட்பட எதுவிதமான கூட்டுத் தொழுகைகளையும் நடாத்த வேண்டாம் என்றும்,

3. இப்தார் நிகழ்ச்சி போன்ற எதுவித ஒன்றுகூடல்களையும் நடாத்த வேண்டாம் என்றும்,

4. பள்ளிவாயிலின் உள்ளோ அல்லது பள்ளிவாயல் வளாகத்தின் உள்ளோ, கஞ்சி காய்ச்சவோ அல்லது கஞ்சி பகிர்ந்தளிக்கவோ வேண்டாம் என்றும்,

5. பள்ளி ஜமாத் அங்கத்தவர்களுக்கு இந்த பணிப்புரைகள் பற்றி முறைப்படி அறிவிக்குமாறும், கொவிட்- 19 தொடர்பான சுகாதார அமைச்சினாலும் பாதுகாப்புத் தரப்பினராலும் வழங்கப்படும் பணிப்புரைகளையும் வழிகாட்டல்களையும் பற்றி ஜமாத் அங்கத்தவர்களுக்கு தெளிவூட்டுவதோடு அவற்றைப் பின்பற்றியொழுகுமாறு மக்களை ஊக்கப்படுத்துமாறும்,

இலங்கை வக்ப் சபை அனைத்து பள்ளிவாயல் நிருவாகிகளையும் பணிக்கின்றது.

அனைவருக்கும் பயன்மிகு றமழானாக இந்த றமழான் அமைய வேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்துக்கின்றாம்.

றமழான் முபாரக்!



ஏ.பி.எம். அஷ்ரப்
வக்ப் சபைப் பணிப்பாளர் மற்றும்
முஸ்லிம சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்
20.04.2020

No comments:

Post a Comment