கொரோனா சூழ்நிலையில் தொடர்ச்சியாக முஸ்லிம் விரோத இனவாத நடவடிக்கைளை மேற்கொண்டு வரும் அத தெரண மற்றும் ஹிரு தொலைக்காட்சி சேவைகள் பார்வையாளர்களை இழந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் நிறுவனம் ஒன்று வெளியிடும் காலாண்டு அறிக்கையிலேயே இதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ள அதேவேளை மார்ச் மாதம் 4ம் திகதி முதல் 31ம் திகதி வரை குறித்த இரு தொலைக்காட்சிகளும் வெகுவாக பார்வையாளர்களை இழந்துள்ளன.
அத தெரண தொடர்ச்சியாக இனவாத நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் சமூக வலைத்தள செயற்பாட்டார்களால் இரு தினங்களுக்கு முன்பே உருவாக்கப்பட்ட 'ஹிரு - தெரண விரோத குழுமம்' தற்சமயம் 30,000த்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கவர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழுமையான அறிக்கையை இங்கு பார்வையிடலாம்:
No comments:
Post a Comment