சட்டத்தரணி ஹிஜாஸ் மீது 'பல்வேறு' குற்றச்சாட்டுகள்! - sonakar.com

Post Top Ad

Thursday, 16 April 2020

சட்டத்தரணி ஹிஜாஸ் மீது 'பல்வேறு' குற்றச்சாட்டுகள்!


நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டிருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடிப்படையில் விசாரணை நடாத்தப்பட்டு வருவதாக அறியமுடிகிறது.



இது குறித்து விபரமறித்த தகவல் மூலங்கள் சோனகர்.கொம்முக்கு கருத்து வெளியிடுகையில் சுமார் பன்னிரண்டு குற்றச்சாட்டுகளின் பின்னணியில் தற்சமயம் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கின்றன.

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்பிலிருந்த அதேவேளை, அவர்கள் சார்ந்த அமைப்புகளிலும் அங்கம் வகித்து வந்ததாகவும், செயற்பாட்டாளராக இருந்ததாகவும் ஏலவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் நீண்ட விசாரணைகள் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இது குறித்து ஆர்வம் காட்டியுள்ளதுடன் குற்றச்சாட்டுகளை தமக்கும் அறிவிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment