கொரோனா நிவாரண நிதி இதுவரை 703 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 23ம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிதி சேகரிப்பு நடவடிக்கைக்கு தொடர்ச்சியாக அரச நிறுவனங்கள், தனியார் என பல பக்கங்களில் இருந்து நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இதேவேளை, அரசு அறிவித்த 5000 ரூபா உதவித் தொகை கிடைக்கவில்லையென பல பகுதிகளிலும் மக்கள் விசனம் வெளியிட்டு வருவதுடன் மக்களுக்கு உதவ நிதி கிடைக்கவில்லையென கிராம சேவை அதிகாரிகளும் அங்கலாய்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment