கொரோனா அபாயத்தின் பின்னணியில் அக்குரணை பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளரின் விளக்கப்படி அனைத்து கிராமச சேவைப் பிரிவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் அக்குரணை பிரதேசத்தில் கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டிருந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment