புத்தளத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பத்துப் பேரையும் சிகிச்சைக்காக அங்கொட, ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இரவு வேளையில் இராணுவ வாகனத்தில் இவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
8 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் உட்பட பத்துப்பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் இவர்களோடு நேரடி தொடர்பிலிருந்தவர்கள் உடனடியாக தமது உடல் நிலை குறித்து பரிசோதனைகளை மேற்கொள்வதோடு சுகாதார அதிகாரியைத் தொடர்புகொள்ளுமாறு நேற்றைய தினம் நகரபிதா பாயிஸ் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment