தற்போது உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் பிரதேசத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை 50 வீதத்தால் அதிகரித்து வெளியிட்டுள்ளது சீனா.
இதனடிப்படையில் தற்போது குறித்த பிரதேசத்தில் இறந்தோர் தொகை 3869 என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இன்று இப்பட்டியலில் 1290 மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் உண்மையான புள்ளி விபரங்களை சீனா மறைத்து வருவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டு வெளியிடப்பட்டு வந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment