சவுதி மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு - sonakar.com

Post Top Ad

Saturday 28 March 2020

சவுதி மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிப்பு



சவுதி அரேபிய தலைநகர் ரியாத் மற்றும் ஜசான் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை வானில் வைத்தே தகர்த்துள்ளதாக சவுதி அரசு தகவல் வெளியிட்டுள்ளது.



சனி இரவு உள்ளூர் நேரப்படி இரவு 11.20 அளவில் ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2018 ஜுன் மாதத்தின் பின் இதுவே சவுதி நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள அதேவேளை யெமன் எல்லைப்புறத்தில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுக்களே இவ்வாறு ஏவுகணைத் தாக்குதல் முயற்சிகளை கடந்த காலத்தில் மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment