அக்குரண உட்பட மூன்று இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டது - sonakar.com

Post Top Ad

Sunday 29 March 2020

அக்குரண உட்பட மூன்று இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டது


அட்டுலுகமையைத் தொடர்ந்து, அக்குரண மற்றும் கடயன்குளம் உட்பட புத்தளம் மாவட்டத்தில் இரு இடங்களையும் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தியுள்ளதாக இராணுவ தளபதி தகவல் வெளியிட்டுள்ளார்.



அக்குரணயில் பாதிப்புக்குள்ளான நபர் குறித்து நேற்றைய தினம் தகவல்கள் வெளியாகியிருந்த அதேவேளை புத்தளம் மாவட்டத்தில் வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில், குறித்த இடங்களுக்கு உட்செல்லவும் அங்கிருந்து வெளியாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment