சஜித் பிரேமதாச தலைமையில் உருவாகியுள்ள புதிய கூட்டணிக் கட்சிக்கு தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரமளித்துள்ளது.
அபே ஜாதிக பெரமுன எனும் பெயரில் ஏலவே பதிவு செய்யப்பட்டிருந்த கட்சியொன்றையே தற்போது நவ சமகி பலவேகய எனப் பெயர் மாற்றியுள்ளதோடு அதற்குத் தலைவராக சஜித் பிரேமதாசவும் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும், சஜித்தின் இதய சின்னம் தொடர்பில் நேற்றைய ஐக்கிய தேசியக் கட்சிக் குழுவில் இணக்கம் காணப்படாத அதேவேளை சஜித் கூட்டத்தை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment