சஹ்ரானின் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாகக் கருதப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 61 பேரினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் தொடர்பிலான விசாரணைகள் இன்னும் முழுமை பெறவில்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஆதாரமங்களற்ற நிலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அண்மையில் அரசியல் வாதிகள் ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment