ஹெட்டிபொல நபர் ஆயுதங்களுடன் கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday, 11 February 2020

ஹெட்டிபொல நபர் ஆயுதங்களுடன் கைது!


குருநாகல், ஹெட்டிபொலயைச் சேர்ந்த 24 வயது நபர் ஒருவர் கைத்துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் தோட்டாக்களுடன் நேற்றிரவு பேலியகொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.



கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் கொட்டாஞ்சேனை, ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் குறித்த நபர் தொடர்பு பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள நபரிடமிருந்து ஆயுதங்களும் கைத்தொலைபேசியும் கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment