கடந்த ஆட்சியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்களை விசாரிக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அரசியல் யாப்புக்கு முரணான விதியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அது சட்டவிரோதம் எனவும் கூறி உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Center for Policy Alternatives அமைப்பு சார்பில் அதன் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதியின் வர்த்தமானியின் அடிப்படையில் குறித்த குழு மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையும் செல்லுபடியாகாது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment