தேசிய தவ்ஹீத் ஜமாத்தினரால் நடாத்தப்படக்கூடிய பள்ளிவாசல்களைத் தடை செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக முஸ்லிம் விவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வக்பு சபைக்கு இதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தகவல்கள் கிடைக்கப்பெறுகிறது. எனினும் இது தொடர்பில் முஸ்லிம் விவகார அமைச்சு இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதையும் செய்யவில்லை.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்புகளின் சொத்துக்கள் முடக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment