இலங்கையில் புர்கா அணிவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐ.எஸ். அமைப்பில் அண்மைக்காலமாக பல்வேறு உயரதிகாரிகள் மீது பெண்களால் தாக்குதல் நடாத்தப்பட்டதன் பின்னணியில் அங்கும் பெண்கள் முகம் மூடும் வகையில் ஆடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக சர்வதேச அளவில் செய்தி பரவி வருகிறது.
ஈரானிலிருந்து இயங்கும் 'அல் அலம்' செய்தி நிறுவனத்தை ஆதாரங்காட்டியே இத்தகவல் பரவி வருகின்றதோடு பாதுகாப்பு கருதி அங்கு இவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்கள் விவகாரத்தில் ஐ.எஸ் அமைப்பு கடும்போக்கைக் கடைப்பிடித்து வருவதுடன் புர்காவைக் கட்டாயப்படுத்தியிருந்ததாகவே நம்பப்படுகின்ற நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment