ஈஸ்டர் தாக்குதலை நடாத்திய சஹ்ரானின் தீவிரவாத குழுவினர் இந்தியாவில் கஷ்மீர் - பெங்களூர் மற்றும் கேரளாவில் ஆயுத பயிற்சி பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது இராணுவம்.
சந்தேகநபர்கள் இந்தியா சென்று வந்ததற்கான விடயங்களை ஆராய்ந்து வருவதாகவும் பெரும்பாலும் அங்கேயே ஆயுத பயிற்சி பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கேரளாவைச் சேர்ந்த சஹ்ரானைப் பின்பற்றும் ஐ.எஸ். உறுப்பினர் ஒருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment