கடந்த வருடம் நவம்பரில் வவுணதீவில் இரு பொலிசார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரை விடுவிக்குமாறு அரசை வலியுறுத்தியுள்ளார் ஆர். சம்பந்தன்.
குறித்த கொலைகளே சஹ்ரான் குழுவின் தீவிரவாத நடவடிக்கையின் ஆரம்பம் என அண்மையில் கண்டுபிடித்துள்ள பொலிசார் வவுண தீவு பொலிசாரிடமிருந்து அபகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஆயுதங்களையும் மீட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே சம்பந்தன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment