இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் தமிழ்நாட்டில் நான்கு பேர் இதுவரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இந்திய உளவு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கும்பகோணம், அதிரைப்பட்டணம், கீழக்கரை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழக்கூடிய பகுதிகளிலிருந்தே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
அதிரைப்பட்டணம், கீழக்கரை போன்ற பகுதிகளோடு இலங்கை முஸ்லிம்களுக்கு பாரம்பரிய தொடர்புகள் இருக்கின்ற அதேவேளை பெருமளவான குடும்ப உறவுகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment