நேற்றைய தினம் சஹ்ரானின் சகோதரி மதனியா பெருந்தொகை பணத்துடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த பணத்தை சஹ்ரானே வீட்டில் வைத்துச் சென்றதாக பொலிசாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு சில வாரங்கள் முன் சஹ்ரான் அங்கு வந்து சென்றதாக மதனியா ஏலவே தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே நேற்று கைப்பற்றப்பட்ட 20 லட்ச ரூபா பணம் சஹ்ரான் வைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த ஏனையோர் சாய்ந்தமருது சுற்றிவளைப்பின் போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment