புல்மோட்டையிலும் வெடிபொருட்கள் மீட்பு: ஒருவர் கைது! - sonakar.com

Post Top Ad

Thursday 2 May 2019

புல்மோட்டையிலும் வெடிபொருட்கள் மீட்பு: ஒருவர் கைது!


புல்மோட்டை பகுதியில் இன்று காலையில் இடம்பெற்ற திடீர் சோதனை நடவடிக்கையில் வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் மற்றும் தேவையான வயர்கள் உட்பட்ட உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.


சம்பவத்தின் பின்னணியில் முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் பல இடங்களிலும் கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை பெரும்பாலான இடங்களில் முஸ்லிம்களே தகவல் வழங்கி வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment