கல்முனை - சம்மாந்துறை - சவளக்கடை பகுதிகளில் இன்றிரவும் 9 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 9 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலை தலைமை தாங்கி நடாத்திய சஹ்ரானின் இரு சகோதரர்கள் தந்தை மற்றும் குடும்பத்தார் சாய்ந்தமருதில் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் சுற்றி வளைக்கப்பட்டிருந்ததோடு அங்கு அவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிரதேசத்தில் தொடர்ந்தும் மேலதிக தேடல் மற்றும் கைது நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment