கடந்த 24 மணி நேர காலத்தில் மாத்திரம் இராணுவத்தினர் 150 சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில் பொலிசார், விசேட அதிரடிப்படையினரும் பிறிதாக தேடல், கைதுகளை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் தாக்குதல் இடம்பெற்று இரு வாரங்களை நெருங்கியும் தொடர்ந்தும் அச்ச சூழ்நிலை பராமரிக்கப்பட்டு வருகின்றமை அவதானிக்கத்தக்கது.
பள்ளிவாசல்களில் 'குண்டுகள்' , வாள்கள் மீட்கப்படுவதாகவும் ஒரு புறமும், இன்னொரு புறத்தில் பல இடங்களில் ஒரே வகையிலான வயர்கள், டெட்டனேட்டர்கள் மீட்கப்படுகின்றமையும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment