ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - மஹிந்தவின் பெரமுன இடையே மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தைகள் இன்று நிறைவுற்றுள்ள நிலையில் நான்காம் கட்டமாக அடுத்த மாதம் 9ம் திகதி மீண்டும் தாம் கூடவுள்ளதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தையின் போது புதிய கூட்டணி தொடர்பில் 20 அம்ச பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது மேலும் இணக்கப்பாடுகள் உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், கூட்டணியின் பிரதான அம்சமான ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் இரு தரப்பும் இரு வேறு நிலைப்பாடுகளில் உள்ளமையும் மஹிந்த தரப்பு மைத்ரியை தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment