2008ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒருவரைக் கடத்தி காணாமல் செய்த குற்றச்சாற்ட்டின் முன்னாள் பிலியந்தல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் அலவத்த கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சுனந்த கந்தம்பி என அறியப்படும் பிலியந்தலயைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக முறையிடப்பட்டதையடுத்து அதன் பின்னணியில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
யுத்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு கடத்தல் மற்றும் கொலைச் சம்பவங்களின் பின்னணியில் பாதுகாப்பு படையினரே தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment