தான் முன்னெடுத்து வரும் தீவிர போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளினால் தனக்கு உயிராபத்து இருப்பதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
தேர்தல் வருடத்தில் மிகவும் தீவிரமாக போதைப் பொருள் ஒழிப்பு பற்றி பேசி வரும் ஜனாதிபதி மரண தண்டனையை அமுல்படுத்தப் போவதாகவும் தெரிவிக்கிறார்.
இந்நிலையிலேயே, தனது உயிராபத்தையும் பொருட்படுத்தாது நாட்டைச் சீர்திருத்தும் இப்பணியை மேற்கொள்வதாக ஜனாதிபதி விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment