கடந்த ஞாயிறு மற்றும் நேற்றைய தினம் பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்த தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்தே மில்லத் இப்ராஹீம் அமைப்புகளை தடை செய்துள்ள அதேவேளை குறித்த அமைப்புகளின் சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறியதொரு இடத்தில் ஆரம்பித்த தேசிய தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் பாரிய நவீன கட்டிடமாக கட்டியெழுப்பப்பட்டுள்ள அதேவேளை ஜமாத்தே மில்லத் இப்ராஹீம் உட்பட பல்வேறு தீவிரவாத போக்குடைய அமைப்புகள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் அனைத்து அமைப்புகளையும் தடை செய்ய நடவடிக்கையெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment