சாய்ந்தமருது: பள்ளிவாசல் நிர்வாகமே பொலிசாருக்கு தகவல் தெரிவித்தது - sonakar.com

Post Top Ad

Saturday 27 April 2019

சாய்ந்தமருது: பள்ளிவாசல் நிர்வாகமே பொலிசாருக்கு தகவல் தெரிவித்தது



சாய்ந்தமருது பகுதியில் நேற்றைய தினம் சந்தேகத்துக்கிடமான முறையில் குடியேறியோர் தொடர்பில் அங்குள்ள ஹிஜ்ரா பள்ளிவாசல் நிர்வாகமே பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது.



சந்தேக நபர்களை நேரடியாக விசாரித்ததில் அதிருப்தி கண்ட பள்ளிவாசல் நிர்வாகம் பொலிசாருக்குத் தகவல் வழங்கியிருந்த நிலையில் அங்கு சோதனைக்காக வந்த பொலிசார் மீது தாக்குதலும் பின் வீட்டுக்குள் குண்டுவெடிப்பும் இடம்பெற்றதன் பின்னணியில் இதுவரை வெளியான உத்தியோகபூர்வ தகவல் அடிப்படையில் 06 சிறுவர்கள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.



இதேவேளை, 17 பேர் உயிரிழந்திருப்பதாக பிரதேசத்தில் தற்சமயம் கருத்து நிலவுகின்றமையும் குடியிருப்பு பகுதி மக்கள் இராணுவ சோதனைக்காக தற்காலிகமாக அருகில் உள்ள காரியப்பர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment