கோட்டாபே ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் பின்னணியில் ராஜபக்ச குடும்பமே இருப்பதாக தெரிவிக்கிறார் ஜே.வி.பி ஊவா மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாராத்ன.
அண்ணனை தம்பி கொன்று, தந்தையை மகன் கொன்று ஆட்சியை அபகரித்த வரலாறுகளின் தொடர்ச்சியிலேயே ராஜபக்ச குடும்பத்துக்குள் பதவி சர்ச்சை நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட ஆயத்தமாகும் கோட்டாபேவுக்கு எதிராக அங்கு இரு சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment