சணச தொழிற்சங்க உறுப்பினர்களின் வைப்புகளை முறைகேடாகப் பதிந்து 75 கோடி ரூபா கொள்ளையிட்டுள்ள குற்றச்சாட்டில் கம்பஹா, சணச யூனியன் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 5000 உறுப்பினர்களின் வைப்பை முறைகேடாகப் பதிவு செய்து இக்கொள்ளை நடாத்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் வெளியானதையடுத்து தலைமறைவாக இருந்த நபர், பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment