குமன தேசிய பூங்காவில் பாதை செப்பனிடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயது நபர் ஒருவர் சிறுத்தையொன்றினால் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ள நிலையில் அங்கு பார்வையாளர்கள் செல்லத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதை செப்பனிடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நால்வரில் இருவர் மீது சிறுத்தை தாக்குதல் நடாத்தியுள்ள நிலையில் ஒருவர் பொத்துவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் சிறுத்தையால் இழுத்துச் செல்லப்பட்ட 29 வயது நபர் உயிரிழந்துள்ளதன் பின்னணியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment