இலங்கை தாக்குதல்களுக்கு ISIS பொறுப்பேற்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday 23 April 2019

இலங்கை தாக்குதல்களுக்கு ISIS பொறுப்பேற்பு!


கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு நகரங்களில் ஞாயிறு தினம் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.


ஐ.எஸ். அல்லது அல்கயீதா பாணியிலேயே தாக்குதல்கள் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு குறித்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 310 பேர் உயிரிழந்திருந்ததோடு 500 பேர் வரை காயமுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் ஈராக் - சிரிய பகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ள ஐ.எஸ். தெற்காசியாவில் இவ்வாறான தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment