ISISஐப் பின்பற்றியே இலங்கையில் தீவிரவாதம்: அமெரிக்கா - sonakar.com

Post Top Ad

Monday 22 April 2019

ISISஐப் பின்பற்றியே இலங்கையில் தீவிரவாதம்: அமெரிக்கா


சர்வதேச பயங்கரவாத அமைப்பாக அறியப்படும் ஐ.எஸ். அமைப்பினைப் பின்பற்றியே இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதம் வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கிறது அமெரிக்கா.



ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் செயலாளர் ராசிக் - தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் சஹ்ரான் போன்றவர்களின் கடும்போக்கு நிலைப்பாடுகள் இதன் பால் தழுவியவை என சர்வதேச பத்திரிகையான டெய்லி மெயில் தகவல் வெளியிட்டுள்ளதுடன் மாவனல்லை பகுதியில் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்புகளுக்கும் குறித்த குழுவினரே பொறுப்பென தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய  பயங்கரவாத தாக்குதல்களை நடாத்தியவர்கள் குறித்து இலங்கை அரசு உத்தியோகபூர்வ தகவல்களை இதுவரை வெளியிடவில்லையாயினும், குண்டுவெடிப்பினையடுத்து இந்திய ஊடகங்கள் சஹ்ரானின் நிழற்படத்தோடு முஸ்லிம் தீவிரவாத அமைப்பின் செயல் என பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.dailymail.co.uk/news/article-6947303/Who-Muslim-extremist-terrorists-killed-290-people-Sri-Lanka.html?ito=social-facebook&fbclid=IwAR3xAjXte1vHGUsvswOIsIyKiw-VOCqTp-e92s0O6_cDEQuVnDFFdVDjdDQ

No comments:

Post a Comment