2009 யுத்த நிறைவின் பின் 2019 வரையான காலப்பகுதியில் 400 வீத வளர்ச்சியைக் கண்ட இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் தடுமாற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பெரும்பாலான சர்வதேச சுற்றுலாப்பயண முகவர்கள் தற்சமயம் தமது வாடிக்கையாளர்கள் அச்சம் காரணமாக விடுமுறைகளை இரத்துச் செய்வதாக தெரிவித்து வருகின்ற அதேவேளை இலங்கையில் திங்கள் நள்ளிரவு முதல் அவசரகால சட்டம் அமுலுக்கு வரவுள்ளது.
இதேவேளை, ஊரடங்கும் மீண்டும் அமுலுக்கு வந்துள்ள நிலையில் நாளை தேசிய துக்க தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment