மாத்தளையில் கடந்த ஞாயிறு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில், சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வந்திருந்த நெதர்லாந்து குடும்பம் ஒன்றும் சிக்கியுள்ளதோடு 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் தந்தை, தாய் மற்றும் சகோதரியும் விபத்தில் காயமுற்றுள்ளதோடு சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை 21 வயதான ரிமோ உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பண்டிகைக்கால போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் சமார் 29,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment