கல்முனை பகுதியில் ஆயுததாரிகளுடன் இடம்பெற்ற போராட்ட முடிவில் இரு சடலங்கள் மற்றும் ஆயுதம் உட்பட தற்கொலை அங்கிகளும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வேன் ஒன்றில் இருந்தே சடலங்கள் மீட்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் ஒரு வீட்டில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் மேலதிக சோதனைகள் தொடர்வதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, துப்பாக்கி பிரயோகத்தின் மத்தியில் சிக்கிய சிவில் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment