தான் ஜனாதிபதியாகி, நாட்டில் தற்போது தலையெடுத்துள்ள பயங்கரவாதத்தை முற்றாக அழிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் கோட்டாபே ராஜபக்ச.
ஐ.எஸ். அமைப்பின் பயிற்சி பெற்ற தீவிரவாத அமைப்பொன்றைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஞாயிறு மேற்கொண்ட தாக்குதல்களில் 250க்கும் அதிகமானோர் உயிரழந்துள்ள நிலையில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வெடிபொருட்கள் மற்றும் ஐ.எஸ் ஆதரவு பிரச்சார உபகரணங்கள், பொருட்களும் மீட்கப்பட்டு வருகிறது.
இந்நிலையிலேயே, கோட்டாபே இவ்வாறு தெரிவிக்கின்றமையும் 2009 யுத்த நிறைவின் பின் பௌத்த பேரினவாதம் தூண்டப்பட்ட காலத்தில் அவரே பாதுகாப்பு செயலாளராக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment