ஞாயிறு தினம் தேவலாயத்தில் வெடிகுண்டு தாக்குதல் இடம்பெறவுள்ளமை குறித்து முன் கூட்டியே அறிந்தும் அத்தகவலை பகிரங்கப்படுத்தாத அமைச்சர் ஹரின் பெர்னான்டோ மற்றும் அவரது தந்தைக்கு எதிராக உதய கம்மன்பிலவின் கட்சி சார்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவ தினம் தாகாகவே முன் வந்து இத்தகவலை வெளியிட்டிருந்த ஹரின், பாதுகாப்பு பிரவினர் முன் கூட்டியே கிடைத்த உளவுத்தகவல்களை உதாசீனம் செய்திருப்பதாக விசனம் வெளியிட்டிருந்தார்.
எனினும், ஹரின் இதனை முன் தினமே பகிரங்கப்படுத்தாதமையை சுட்டிக்காட்டி பொலிஸ் தலைமையகத்தில் இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment