இன்றிரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணிவரை மீண்டும் ஊரடங்கு அமுலுக்கு வருவதாக அறிவிகப்பட்டுள்ளது.
ஞாயிறு தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் பெருமளவு கைதுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் சந்தேக நபர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் பரந்த ரீதியிலான சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. இன்றைய தினம் வறகாபொலயில் மீட்கப்பட்ட வேன் ஒன்றுடன் தொடர்புடைய ஹெம்மாத்தகமயைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment