நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் எவ்வித கட்சி பேதமும் இன்றி தாம் - பிரதமர் மற்றும் அரசாங்கம் ஒற்றுமையாகவே பணியாற்றுவதாக தெரிவிக்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அதிரடியாக மஹிந்தராஜபக்சவை பிரதமராக்கிய மைத்ரி, ஐக்கிய தேசியக் கட்சியுடனான தமது உறவை முறித்துக் கொண்டிருந்தார்.
இதேவேளை, நீதிமன்றம் ஊடாக மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியுடன் தொடர்ந்தும் விரிசல் நிலவியமையே பயங்கரவாத தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனதற்கான காரணம் என புலப்பட்டுள்ள நிலையில் தற்போது அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றுவதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment