தாக்குதலுக்குத் திட்டமிட்ட சஹ்ரானின் 'கேரள' சகா கைது! - sonakar.com

Post Top Ad

Tuesday 30 April 2019

தாக்குதலுக்குத் திட்டமிட்ட சஹ்ரானின் 'கேரள' சகா கைது!


இலங்கையையடுத்து கேரளாவில் தாக்குதல் ஒன்றை நடாத்தத் திட்டமிட்டதாகக் கருதப்படும் ரியாஸ் அபுபக்கர் எனும் நபர் இந்திய உளவுத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


29 வயதான குறித்த நபர் சஹ்ரானின் பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பின்பற்றி வந்ததாகவும் கேரளாவில் தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டமையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சஹ்ரானின் நெருங்கிய நண்பரான ஹசன் என்பவர் சென்னை வந்து பலரை சந்தித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment