பாதுகாப்பு படைகளின் தலைமைப் பொறுப்புகளில் அதிரடியாக மாற்றங்களைக் கொண்டு வர ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்கள் தனக்கும் கிடைக்கவில்லையெனவும், கிடைத்திருந்தால் உடனடி நடவடிக்கையெடுத்திருப்பேன் எனவும் தெரிவிக்கின்ற அவர், தலைமைப் பொறுப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதோடு முப்படைகளின் கட்டுமானத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் திட்டங்கள் குறித்து உளவுத்தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதிலும் அது முறையாகப் பகிர்ந்து கொள்ளப்படாத சூழ்நிலையிலேயே ஞாயிறு தினம் தாக்குதல்கள் நடந்துள்ளதாக உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment