ஞாயிறு தாக்குதல்களில் 45 சிறுவர் உயிரிழப்பு: ஐ.நா - sonakar.com

Post Top Ad

Tuesday 23 April 2019

ஞாயிறு தாக்குதல்களில் 45 சிறுவர் உயிரிழப்பு: ஐ.நா


கடந்த ஞாயிறு கொழும்பு - நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற பயங்கரவா தாக்குதல்களில் இதுவரை வெளியான தகவல்களின் அடிப்படையில் 45 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஐ.நா .


சம்பவங்களில் உயிரிழந்தோர் தொகை 320 ஆக உயர்ந்துள்ள நிலையில் அதில் 45 சிறுவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் இயங்க ஆரம்பித்த ஸஹ்ரான் மற்றும் சகாக்களே இத்தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment