இராணுவ உடைகளுக்குச் சமமான ஆடைகள் தைத்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை கிளிநொச்சியில் கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபர் (44) கொழும்பு, தெமட்டகொடயைச் சேர்ந்தவர் என்பதோடு இவ்வாறான ஆடை தயாரிப்பிற்கான அனுமதியெதுவும் அவரிடம் இருக்கவில்லையெனும் பின்னணியில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்று தம்புள்ள பொருளாதார மையத்திலும் அதிகாலை இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் தற்சமயம் அவசரகால சட்டம் அமுலில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment